ஆன்லைன் மோசடி

Update: 2026-09-13 09:14 GMT

திருச்சி மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக கவரிங் நகைகளை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து, வாட்ஸ்அப் வாயிலாக புகைப்படங்களை அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை மதிப்புள்ள நகைகளுக்கு ஆர்டர் பெறுபவர்கள், தபால் மூலமாக ரூ.50 மதிப்புள்ள தரமற்ற பொருட்களை அனுப்பிவிட்டு வாடிக்கையாளர்களுடனான தொடர்பை துண்டித்து ஏமாற்றி வருகின்றனர். சிறிய தொகையாக இருப்பதால் பலரும் புகார் அளிக்க தவறுவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபடும் இத்தகைய நபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்