பயன்பாடின்றி கிடக்கும் சமுதாயக்கூடம்

Update: 2026-09-13 09:01 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் இரூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசிக்கும் நிலையில், அங்குள்ள சமுதாய நலக்கூடம் முறையான பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது. இதனால் கிராமத்தில் நடைபெறும் முக்கியக் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சமுதாய நலக்கூடத்தை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்