வாடகை கட்டிடத்தில் இயங்கும் அஞ்சல் நிலையம்

Update: 2026-09-13 08:59 GMT

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் துணை அஞ்சல் நிலையத்தின் கீழ் இயங்கி வரும் செங்குணம் கிளை அஞ்சல் நிலையம் பல வருடங்களாக தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால், அடிக்கடி இடம் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் அஞ்சலக பணியாளர்களும், அஞ்சல் சேமிப்பு கணக்குகள் மற்றும் பல்வேறு சேவைகளை பெறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே செங்குணம் கிளை அஞ்சல் நிலையத்திற்கென நிரந்தரமாக அரசு கட்டிடம் கட்டித் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்