வன்னியர்பாளைம், பீச்ரோடு, வடிவேல் நகர், காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் அதிகளவு பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இவை அங்கு கொட்டப்படும் குப்பைகளை கிளறுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை பிடித்து அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.