திருப்பூர் செல்லாண்டியம்மன்துறையில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்ததால் குழந்தைகள் நொய்யல் வீதிஅங்கன்வாடி மையத்துக்கு மாற்றப்பட்டனர். அதன்பின்னர் அந்த அங்கன்வாடி கட்டிடம் பூட்டியே கிடக்கிறது. எனவே அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைத்து மீண்டும் திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.