உடுமலை அருகே பள்ளபாளையம் ஊராட்சி ஊராட்சி திருமூர்த்திமலை, அமராவதி அணை, கேரளம் மாநிலத்திற்கு செல்லும் சாலை சந்திக்கும் மையமாகும். இங்குள்ள சாலை வளைவில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் சாலையோரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த சாலையில், வாகனங்கள் அதிக வேகத்தில் வந்து திரும்பினால் பயணிகள் மீது மோதி விபத்து ஏற்படும். எனவே பயணிகள் நிழற்குடை கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.