பென்னாகரம் சுற்று வட்டார பகுதிகளான பெரும்பாலை, ஏரியூர் உள்ளிட்ட பகுதிகளில் வளர்ந்துள்ள பனை மரங்களை சிலர் அனுமதி இன்றி வெட்டி எடுத்து செங்கல் சூளைகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் கடத்துகின்றனர். ஏற்கனவே வறட்சியாக இருக்கும் ஏரியூர், பெரும்பாலை பகுதிகள், பனை மரங்கள் வெட்டப்படுவதால், மேலும் கடும் வறட்சியை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பனை மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.