இடிந்து விழும் நிலையில் கால்நடை மருத்துவமனை

Update: 2026-08-30 13:49 GMT

திருச்செங்கோடு அருகே திம்மராவுத்தம்பட்டியில் கடந்த 2013-ம் ஆண்டு கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. தற்போது கால்நடை மருத்துவமனையின் கட்டிடம் வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், சில இடங்களில் கான்கிரீட் இடிந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கால்நடை மருத்துமனையை புனரமைத்து புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்