விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் ஊராட்சியில் உள்ள ஓடை பாலம் பல மாதங்களாக சேதமடைந்து கிடக்கிறது. இதனால் பாலத்தை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே விபத்துகள் ஏதேனும் நடப்பதற்கு முன்பு சேதமடைந்த ஓடைபாலத்தை விரைந்து சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.