தெருநாய்கள் தொல்லை

Update: 2026-08-30 10:30 GMT

கரூர் வெங்கமேடு பகுதி முனியப்பன் கோவில் தெரு, என்.எஸ்.கே. நகர், வாங்கப்பாளையம், தங்க நகர் மற்றும் காந்தி நகர் பகுதிகளில் அதிக அளவில் சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இவை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை துரத்தி செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதுடன், இரவு நேரங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளை பிடித்து செல்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தொல்லை தரும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்