ஒடுகத்தூர் அருகில் உள்ள மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அங்கு ஊராட்சிக்கு சொந்தமாக சுமார் 50-க்கும் மேற்பட்ட புளியமரங்கள் உள்ளன. அதில் ஒருசில புளியமரங்கள் பெரிய அளவில் பொந்து விழுந்தும், இரண்டாக பிளந்தும் ஆபத்தான நிலையில் உள்ளன. அந்த மரங்களால் எந்நேரமும் மக்களுக்கு ஆபத்து நடக்கலாம் என அஞ்சப் படுகிறது. ஆபத்தான நிலையில் இருக்கும், மக்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்களை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.
-கந்தன், மேல்பள்ளிப்பட்டு.