நாட்டறம்பள்ளியில் இருந்து பச்சூர் வழியாக கொத்தூர் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள குப்பம் பகுதிக்கு செல்லும் மாநில சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இது, தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் மேலூர் அருகே இரு பக்கமும் செடி, கொடிகள், புதர்கள் 10 அடி உயரத்துக்கு வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. சாலை பணியாளர்கள் இப்பகுதியில் சாலையோரம் வளர்ந்துள்ள செடி, கொடிகள், புதர்கள், மரங்களை அகற்றுவார்களா?
-ராஜேந்திரன், நாட்டறம்பள்ளி.