போளூர் தாலுகா அத்திமூர், மாம்பட்டு, பெரியகரம், போளூர் போன்ற ஏரிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கக் கூடியது மஞ்சளாறு. இந்த ஆறு ஜவ்வாதுமலை பற்றக்காடு என்னும் இடத்தில் உற்பத்தியாகிறது. மஞ்சளாறு வரும் வழியில் பல இடங்களில் ஆக்கிரமிப்புக்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் போளூர் அருகில் உள்ள மாம்பட்டில் மஞ்சளாற்று கால்வாயை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மாம்பட்டு மஞ்சளாற்று கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும்.
-பாஸ்கரன், மாம்பட்டு.