வடக்கனந்தல் பேரூராட்சி கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையம் அருகே சிறுவர் பூங்கா மற்றும் நூலக கட்டிடம் ஆகியவை உள்ளன. பூங்காவிற்கு வரும் சமூக விரோதிகள் சிலர் மது அருந்திக்கொண்டு அதிகப்படியாக சத்தம் எழுப்புவதால் நூலகத்திற்கு வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே அட்டகாசம் செய்யும் மதுப்பிரியர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.