மதுரை நகர் பாரதியார் ரோடு, சோலையழகுபுரம், வில்லாபுரம் பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் அப்பகுதி குடியிருப்புவாசிகள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தையும் ஏற்படுத்தி செல்கின்றது. இவ்வாறு தொடர் தொல்லையில் ஈடுபட்டு வரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?