திருவள்ளூர் மாவட்டம், ஆவடி ரெயில் நிலையம் அருகே டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கிவருகிறது. இதனால் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும் பெண்களும், குழந்தைகளும் அச்சத்துடனே அந்த பகுதியை கடந்துசெல்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.