சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனஓட்டிகளை நாய்கள் துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்துகளை ஏற்படுத்துகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.