புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் இருந்து காலாடிபட்டி சத்திரம் வரை உள்ள சாலையின் இருபுறங்களிலும் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்து புதர்களாக காணப்படுகின்றன. இதனால் சாலையின் அகலம் குறைந்து எதிரே வரும் வாகனங்களை சரியாக கவனிக்க முடியாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பஸ்களில் பயணிப்போர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சாலையோர செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.