‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2026-08-23 12:13 GMT

பெரம்பலூர் வட்டம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் கைகாட்டி பகுதியில் சாலையோரம் நடப்பட்டு இயற்கைப் இடர்பாடுகளால் சாய்ந்து சேதமடைந்திருந்த மரக்கன்றுகள் முன்பு பாதுகாக்கப்படாமல் இருந்தன. இதனால் அம்மரக்கன்றுகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு சேதமடையும் அபாயமும் ஏற்பட்டிருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மரக்கன்றுகளை சீரமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்