மருங்கூர், இரவிபுதூர், குமாரபுரம் தோப்பூர் பகுதிகளில் சாலையில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை சாலையில் கூட்டமாக சுற்றித்திரிவதும், பாதசாரிகள், வாகனங்களில் செல்வோரை விரட்டுதும், கடிக்க முயற்சிப்பதுமாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாராயணன், மருங்கூர்.