மொடக்குறிச்சி அருகே புதூர் கிராமம் வள்ளி கார்டன் முதல் வீதியில் கடந்த மாதம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் சாலையோரத்தில் இருந்த மரத்தின் கிளை முறிந்து விழுந்து விட்டது. இந்த சம்பவத்தில் அடியில் நின்றிருந்த காரும், மோட்டார் சைக்கிளும் சேதம் இல்லாமல் தப்பின. மேலும் மரத்தின் அடியில் மின்கம்பி செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மரக்கிளையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.