பழுதான பயணிகள் நிழற்குடை

Update: 2026-08-23 10:13 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மானூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பஸ் நிறுத்தம் உள்ளது. அதில் பயணிகள் நிழற்குடையும் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த நிழற்குடை பாதுகாப்பானதாக இல்லை. மிகவும் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக அந்த நிழற்குடையை பயன்படுத்தவே பயணிகள் அச்சப்படுகிறார்கள். இதனால் மழை, வெயிலில் திறந்த வெளியில் பஸ்சுக்காக காத்திருந்து அவர்கள் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு புதிதாக நிழற்குடை அமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்