திருச்சி ராமச்சந்திரா நகர் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அவ்வழியாக நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என எல்லோரையும் கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், இருசக்கர வாகனத்தில் செல்வோரையும் விரட்டி கடிக்க பாய்கிறது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.