விருதுநகர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மாத்திரை வழங்குவதற்கு போதிய கவுண்டர்கள் இல்லை. இதனால் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள், மற்றும் கர்ப்பிணிகள் மாத்திரை வாங்குவதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மாத்திரைகள் வழங்க கூடுதல் கவுண்டர்கள் சிறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.