தூக்கி வீசப்பட்ட பூந்தொட்டிகள்

Update: 2026-07-26 16:13 GMT

ஏற்காட்டில் ஆண்டு தோறும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தாண்டும் மலர் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் பிளாஸ்டிக் ஜாடிகளில் பல வண்ண வண்ண பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் கண்காட்சி முடிந்ததால் பூச்செடிகள் வைக்கப்பட்ட தொட்டிகளை கொஞ்சம் அடிக்கி வைத்துவிட்டு மீதம் உள்ள ஜாடிகளை தூக்கி வீசி குவித்து வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தூக்கி வீசப்பட்ட பூந்தொட்டிகளை அடுக்கி வைத்து மீண்டும் மலர் கண்காட்சியில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்