சுகாதாரமற்ற சுகாதார வளாகம்

Update: 2026-07-26 14:04 GMT

வெண்ணந்தூர் அடுத்த ஆலாம்பட்டி பஞ்சாயத்து பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தற்போது பராமரிப்பின்றி உள்ள இந்த சுகாதார வளாகத்தில் கட்டிடத்தின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. மேலும் கழிவுநீர் வடிகால் அடைப்பு காரணமாக சில கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்