வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பொது தேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தில் 100 நாள் வேலை திட்ட ஆட்களை வைத்து மரங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 2 அடிக்கு ஒரு புளியமரம் மற்றும் பல வகை மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதில் வனப்பகுதி போல் மரங்கள் அடர்ந்து இருப்பதினால் விஷ ஜந்துக்கள் வாழும் இடமாக மாறி வருகிறது. போதிய இடைவெளி விட்டு குறைந்தது 15 அடிக்கு ஒரு மரக்கன்று நட்டால் மரங்கள் நன்கு வளர்ந்து பலன் கிடைக்கும். இது குறித்து வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.