பஸ் நிலையத்தில் மதுப்பிரியர்கள் அட்டகாசம்

Update: 2026-07-19 15:18 GMT

ஏரியூர் பஸ் நிலையம் ரூ.3½ கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இருப்பினும் கழிவறை பயன்பாட்டிற்கு வராததால், பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பஸ் நிலையத்தின் முதல் மாடியில் உள்ள கடைகள் ஏலம் போகாமல் கிடப்பில் கிடக்கிறது. இதனால் அங்கு சிலர் மது அருந்துவதும், சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் பஸ் நிலைய பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏரியூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்