அரியலூர் - வி.கைகாட்டி சாலை விரிவாக்க பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் வி.கைகாட்டி தனியார் பள்ளி அருகே சாலையோரம் அமைந்துள்ள பழமையான ஆலமரம் ஒன்று வெட்டப்படும் சூழல் உருவாகியுள்ளது. வழிப்போக்கர்கள் மற்றும் பொதுமக்கள் பலருக்கு நிழல் தரும் புகலிடமாக இந்த ஆலமரம் விளங்குகிறது. எனவே, இந்த மரத்தை அகற்றாமல் சாலை பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.