வலுவிழக்கும் கட்டிட சுவர்

Update: 2026-07-19 13:43 GMT

குன்னூர் அருகே ஓட்டுப்பட்டறை முத்தாலம்மன் கோவில் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அங்கன்வாடி மைய கட்டிடத்தின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டு உள்ள மண் அகற்றப்படாமல் இருக்கிறது. இதனால் கட்டிடத்தில் ஈரப்பதம் உருவாகி வருகிறது. இதன் காரணமாக கட்டிட சுவர் வலுவடையும் நிலை உள்ளது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் மண்ணை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்