கோவை தடாகம் ரோடு வாழைக்காய் மண்டி அருகே சமுதாய கூடம் உள்ளது. இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் கட்டிடத்தின் பல்வேறு இடங்களில் செடிகள் முளைத்து வருகின்றன. இதனால் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடம் வீணாகும் நிலை உள்ளது. எனவே அந்த கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.