கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவர்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆதார் சேவையை பெறுவதற்காக கூடலூர் சென்று வர வேண்டி உள்ளது. அது நீண்ட தூரத்தில் உள்ளதால் நேர விரயம், போக்குவரத்து செலவு உள்பட பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். எனவே தேவர்சோலையில் ஆதார் சேவை மையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.