கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி நேரு நகர் அடுக்குமாடி குடியிருப்பில் 640-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பல இடங்களில் இருந்து குடிபெயர்ந்துள்ள இவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க, தாங்கள் வசித்த பழைய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு செல்கின்றனர். இதனால் அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இக்குடியிருப்பில் ரேஷன் கடைக்கெனக் கட்டப்பட்ட கட்டிடம் பயன்பாடின்றி உள்ளதால், பொதுமக்களின் நலன் கருதி இங்குப் பகுதிநேர ரேஷன் கடையைத் திறக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.