திருச்சுழி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் சில இளைஞர்கள் வாகனங்களை அதிவேகத்தில் இயக்குவதாலும், அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துவதாலும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அச்சமடைவதுடன் எதிரே பயணிக்கும் பிற வாகன ஓட்டிகளும் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.