சுருளகோட்டில் ஊராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முகப்பு பகுதியில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவில் அமைக்கப்பட்டிருந்த ஊராட்சியின் பெயர் பலகை சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது பெயர் பலகையின்றி அலுவலகம் காட்சி அளிக்கிறது. எனவே, சேதைமடைந்த அலங்கார வளைவை சீரமைத்து பெயர் பலகை அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரதாஸ், சுருளகோடு.