ஆபத்தான நீர்த்தேக்கத்தொட்டி

Update: 2026-07-05 11:30 GMT

திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியம் கலிங்கமுடையான்பட்டி ஊராட்சி வைகறை கிராமத்தில் 35 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பழுதடைந்த நிலையில் உள்ளது. தற்போது இந்தத் தொட்டியின் தூண்கள் பலவீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன் ஆபத்தான இந்த நீர்த்தேக்கத்தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்