புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 13 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடம் முறையான பராமரிப்பின்றி விரிசல் அடைந்து காணப்படுகிறது. இ-சேவை மையம் மற்றும் 10-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் இயங்கும் இக்கட்டிடத்தின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுவதால் பொதுமக்கள், அலுவலர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் இந்த அரசு கட்டிடத்தை உடனடியாகச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.