ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் ராதானூர் ஊராட்சி மேடாகோட்டை கிராமத்தில் அமைந்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பல மாதாங்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. மேலும் தொட்டியை சுற்றி சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் இங்கு தண்ணீர் பிடிக்க வரும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்வதுடன், சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.