அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கீழநத்தம் கிராமத்தில் ஆரியான் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் சுமார் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் இந்த ஏரியில் உள்ள வண்டல் மண்ணை அள்ளி, ஏரியை தூர்வாரினால் நன்செய் நிலங்கள் விவசாயம் செய்வதற்கு போதுமான அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஏரியை தூர்வார விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.