குரங்குகள் தொல்லை

Update: 2026-06-07 11:29 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் மடத்துக்கடை வீதி, பழைய ஆதனக்கோட்டை, திருவள்ளுவர் நகர் ஆகிய வீதிகள் உள்ளன. இந்த வீதிகளில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ள நிலையில், நூற்றுக்கணக்கான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை சில நேரங்களில் கடைக்குள் புகுந்து பொருட்களை எடுத்துச்செல்வதோடு, வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. மேலும் விவசாய வயல்களுக்குள் புகுந்து தானியப் பயிர்களை நாசம் செய்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆதனக்கோட்டை கடைவீதி பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்