ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுவட்டார பகுதியில் உள்ள சில கிராமப்புற சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. மேலும் இந்த கால்நடைகள் சாலையில் ஆங்காங்கே படுத்துக்கொள்வதால் வாகனங்கள் பயணிக்க சிரமமாக உள்ளது. மேலும் கால்நடைகளால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் கால்நடைகள் திரிவதை தடுக்கவும், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?