ஆபத்தான மரங்கள்

Update: 2026-06-07 09:05 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட புஞ்சைக்கொல்லி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பாலம் அருகே சாலையோரத்தில் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் வகையில் ராட்சத மரங்கள் காணப்படுகின்றன. இந்த மரங்களின் கிளைகள் பலத்த காற்று மற்றும் மழையின்போது முறிந்து விழுந்து வருகின்றன. விரைவில் அந்த மரங்களும் விழ வாய்ப்பு உள்ளது. இதனால் அங்கு வசித்து வரும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே ஆபத்தான அந்த மரங்களை உடனடியாக வெட்டி அகற்ற அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்