கூடலூரில் இருந்து வயநாடு செல்லும் சாலையில் இருந்து 1-ம் மைல் கோல்டன் அவென்யூ தெருவுக்கு பாதை பிரிகிறது. இந்த பகுதியில் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். ஏனென்றால், வேகத்தடை இல்லாததால் தெருவில் இருந்து சாலைக்கு வரும்போது வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.