அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பழைய நீதிமன்ற வளாகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மின் உற்பத்தி ஜெனரேட்டர் நிறுவப்பட்டது. தற்போது நீதிமன்றம் கழுவந்தோண்டிக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், ஜெனரேட்டர் மட்டும் ஜெயங்கொண்ட ம் பழைய நீதிமன்ற வளாகத்திலேயே பயன்பாடற்று கிடக்கிறது. சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள இந்த ஜெனரேட்டர் திருட்டு போகும் நிலை உள்ளது. எனவே அந்த ஜெனரேட்டரை வேறு அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.