தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த சிங்காரத்தோப்பு முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கோவில் வளாகம் முழுவதும் கற்கள் நிறைந்த களிமண்ணாக இருப்பதால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கோவில் வளாகம் முழுவதும் தரைப்பகுதியில் சிமெண்டு தளம் அமைத்தும், கூடுதலாக உணவு கூடங்களை ஏற்படுத்தியும், வாகனங்கள் நிறுத்த தனி இடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.