சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நீண்ட நாட்களாக லிப்ட் வேலை செய்யவில்லை. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அந்த லிப்ட்டை பயன்படுத்த முடியாததால் அவர்கள் மாடி கட்டிடத்துக்கு செல்ல பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.