உயிரிழப்பு ஏற்படும் அபாயம்

Update: 2026-05-03 16:55 GMT

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் - நொய்யல் செல்லும் வழியில் மரவாபாளையம் அருகே சாலையோரத்தில் மணல் பரப்பில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பம் நடப்பட்டு அந்த மின்கம்பத்தில் உயர் அழுத்த மின்கம்பிகள் பொருத்தப்பட்டு மின்வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், மின்கம்பம் சற்று சாய்வாக உள்ளது. இதனால் காற்றடிக்கும் நேரத்தில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாய்வாக உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்