பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் இரவு நேரங்களில் கிரஷர்கள் இயங்குவதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி எப்போதும் அதிக சத்தத்துடனும், இரைச்சலுடனும் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் உறங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.