பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கும், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் இடைப்பட்ட பகுதியில் துறையூர் சாலையில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மின்விளக்கு இரவு நேரத்தில் சரிவர எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதினால், இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் பயணிகள், பெண்கள் பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின்விளக்கை சரி செய்ய வேண்டும்.