செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கடப்பேரி பகுதியில் ரெயில்நிலையம், தீயணைப்புநிலையம் ஆகிய இடங்களுக்கு செல்லும் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் கண்காணிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் போன்ற நிகழ்வுகள் நடைபேறும் அச்சத்துடனே மக்கள் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்கவேண்டும்.